Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு பள்ளி மாணவர் மாவட்ட பேச்சு போட்டியில் முதலிடம்

அரசு பள்ளி மாணவர் மாவட்ட பேச்சு போட்டியில் முதலிடம்

அரசு பள்ளி மாணவர் மாவட்ட பேச்சு போட்டியில் முதலிடம்

அரசு பள்ளி மாணவர் மாவட்ட பேச்சு போட்டியில் முதலிடம்

ADDED : ஜூலை 10, 2024 04:43 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம் : தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடந்த பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் இசக்கிராஜாவை ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் இசக்கி ராஜா 15. இவர் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

மாணவருக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட அளவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 38 மாணவர்கள் பங்கேற்றதில் முதல் பரிசு பெற்ற இசக்கி ராஜாவிற்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜு தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதில் ஆசிரியர் சதக்கத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us