Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

ADDED : ஜூலை 12, 2024 11:15 PM


Google News
ராமநாதபுரம்:துாத்துக்குடி பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கப்பலில் ரோந்து சென்ற போது எல்லை தாண்டி இந்திய பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.

இலங்கை காலே மாவட்டம் அம்பலன்கோடா பகுதியை சேர்ந்த ராமுது இண்டிகா திலிப்குமார, 42, போக்லே பியால் டி சில்வா, 44, கழுத்தோடக நிரங்க லக்மால், 27, கபுகே கியாங்கே தாரக அமிலகுமார, 40, சுசாந்தா, 39, ராம்புத்ரா சமிந்தா புஷ்ப குமார, 37, மாலியா வடு சுபாலி, 57, ஆகிய ஏழு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏழு மீனவர்களுக்கும் ஜூலை 26 வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us