ADDED : ஜூன் 03, 2024 02:52 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே எட்டியதிடல் புனித அடைக்கல அன்னை சர்ச் விழாவில் தேர்பவனி விழா நடந்தது.
முன்னதாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அடைக்கல அன்னை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தபோது பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு வரவேற்றனர். பின்பு, செங்குடி பங்கு பாதிரியார் தினேஷ் தலைமையில் நடைபெற்ற திருவிழா கூட்டு திருப்பலியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.