/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 22, 2024 04:45 AM

ராமேஸ்வரம்: நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கோயில் அக்னி தீர்த்த கடலிலும், பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர்.
இதன்பின் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வெளியூர் வாகனங்கள் வருகை அதிகரிப்பால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.