Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சேதமடைந்த மகளிர் மன்ற கட்டடங்கள்

சேதமடைந்த மகளிர் மன்ற கட்டடங்கள்

சேதமடைந்த மகளிர் மன்ற கட்டடங்கள்

சேதமடைந்த மகளிர் மன்ற கட்டடங்கள்

ADDED : ஜூலை 11, 2024 04:52 AM


Google News
உத்தரகோசமங்கை: நல்லிருக்கை மற்றும் ஆலங்குளம் ஊராட்சிகளில் 1999ல் கட்டப்பட்ட சேதமடைந்த மகளிர் மன்ற கட்டடங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. உத்தரகோசமங்கை ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன் கூறியதாவது:

விபத்திற்கு வழி ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்த நிலையில் உள்ள நல்லிருக்கை, ஆலங்குளம் ஊராட்சியில் உள்ள மகளிர் மன்ற கட்டடம் எவ்வித பயன்பாடு இல்லாமல் இடிபாடுகளுடன் உள்ளது.

இதனால் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இக்கட்டடத்தால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே கட்டடத்தை இடித்து அகற்றக்கோரி திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்.

எனவே யூனியன் அதிகாரிகள் பயன்படாத விபத்திற்கு வழிவகுக்கும் மகளிர் மன்ற கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us