Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சேதமடைந்த மேல்நிலை தொட்டி டிரான்ஸ்பார்மர் : மக்கள் பாதிப்பு

சேதமடைந்த மேல்நிலை தொட்டி டிரான்ஸ்பார்மர் : மக்கள் பாதிப்பு

சேதமடைந்த மேல்நிலை தொட்டி டிரான்ஸ்பார்மர் : மக்கள் பாதிப்பு

சேதமடைந்த மேல்நிலை தொட்டி டிரான்ஸ்பார்மர் : மக்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 18, 2024 10:30 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : முதுகுளத்துார் தாலுகா ஏ.நெடுங்குளத்தில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 40 ஆண்டான டிரான்ஸ்பார்மர்களால் மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.

சாத்தானுார் ஊராட்சி ஏ.நெடுங்குளம் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், நெடுங்குளத்தில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

மின்வயர்கள் மாற்றப்படாமல் லேசான மழை, காற்று வீசினால் கூட அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதே போல் 20 ஆண்டுகளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காவிரி நீரை ஏற்றி குடிநீர் வழங்குகின்றனர். தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து நீர்க்கசிவு ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற நிலையில் தொட்டியை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை. தொட்டியில் அணில், எலி செத்து மிதக்கிறது. அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்படுகிறோம்.

எனவே சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர், மேல்நிலைத்தொட்டியை அகற்றி புதிதாக அமைத்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us