ADDED : மார் 12, 2025 01:04 AM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கிழக்கு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார கல்வி அலுவலர் தமிழரசி தலைமையில் நடந்தது.
கிழக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூவலிங்கம், வார்டு கவுன்சிலர் சரண்யா முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நேற்று புதிதாக நான்கு மாணவர்களை பெற்றோர் கிழக்கு பள்ளியில் சேர்த்தனர். பள்ளி ஆசிரியர்கள் அங்கயற்கண்ணி, மரியாள் உட்பட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.