ADDED : ஜூன் 16, 2024 04:42 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே புறக்கரை சக்தி காமாட்சி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
பக்தர்கள் கொண்டு சென்ற பாலில் மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின் 18 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்துஇருந்தனர்.