Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ADDED : ஜூன் 21, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். அவருக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்துகின்றனர். காலை 9:00 மணிக்கு வரும் இரு ஆசிரியர்கள், மாணவியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவி 9:30 மணிக்கு பள்ளிக்கு வந்த பின், அவருக்கு பாடம் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த மாணவிக்காக, கடம்பூர் அருகே குருந்தங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவை எடுத்து வந்து வழங்குகின்றனர்.

கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் நகரங்களுக்கு சென்று விட்டனர்; வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், 80 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில் மாணிக்கம்கோட்டை, கடம்பூர், உள்ளிட்ட 11 அரசு தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us