ADDED : ஜூலை 05, 2024 04:28 AM
திருவாடானை: திருவாடானை சப்டிவிஷனில் மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு 141 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடானை டி.எஸ்.பி., நிரேஷ் கூறியதாவது: திருவாடானை சப்-டிவிஷனில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஜூன் 3, 4 தேதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் திருப்பாலைக்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 141 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.1000 கைப்பற்றபட்டது.
தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மது விற்பதாக தகவல் கிடைத்தால் பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.