Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/எலி பேஸ்டில் பல் துலக்கியவர் பரிதாப பலி

எலி பேஸ்டில் பல் துலக்கியவர் பரிதாப பலி

எலி பேஸ்டில் பல் துலக்கியவர் பரிதாப பலி

எலி பேஸ்டில் பல் துலக்கியவர் பரிதாப பலி

ADDED : ஜன 19, 2024 11:48 PM


Google News
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே ஏம்பல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 27. இவர், நேற்று முன்தினம் காலை, டூத் பேஸ்ட் என நினைத்து, தவறுதலாக, எலி பேஸ்ட் வைத்து பல் துலக்கினார்.

சிறிது நேரத்தில் வினோத்குமாருக்கு மயக்கம் வந்ததால், குடும்பத்தினர் அவரை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏம்பல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us