/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணி கண்டுபிடிப்பு பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணி கண்டுபிடிப்பு
பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணி கண்டுபிடிப்பு
பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணி கண்டுபிடிப்பு
பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணி கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:57 AM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அரண்மனை திடலில் செங்கல் கட்டுமானங்களும், கண்ணாடி மணிகள், பச்சைக்கல் மணி, கண்ணாடி வளையல்கள், இரும்பு ஆணிகள் போன்ற தொல்பொருட்கள் கிடைத்தன.
நேற்று நடைபெற்ற அகழாய்வு பணியில், பல்வேறு அளவுகளில் ஐந்து செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன. செம்பு ஆணி ஒன்று 2 கிராம் எடையும், 2.3 செ.மீ., நீளம், 1.2 செ.மீ., தடிமன் கொண்டுள்ளது. இதுவரை இரும்பினால் ஆன ஆணிகளே கிடைத்து வந்த நிலையில், தற்போது, செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்துள்ளன.
மேலும், கண்ணிற்கு மைத்தீட்டுவதற்கு பயன்படுத்தப்படும், 3 செ.மீ., நீளமுள்ள செம்பினால் ஆன அஞ்சனக்கோல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த தொல்பொருட்கள் பொற்பனைக்கோட்டையில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு செழிப்பை வெளிக்காட்டுகிறது. தொடர்ந்து, இங்கு நடைபெறும் அகழாய்வு பணியில், செம்பினால் ஆன பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.