/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காட்டு யானை தாக்கி ரிசார்ட் உரிமையாளர் பலி காட்டு யானை தாக்கி ரிசார்ட் உரிமையாளர் பலி
காட்டு யானை தாக்கி ரிசார்ட் உரிமையாளர் பலி
காட்டு யானை தாக்கி ரிசார்ட் உரிமையாளர் பலி
காட்டு யானை தாக்கி ரிசார்ட் உரிமையாளர் பலி
ADDED : செப் 19, 2025 08:25 PM

கூடலுார்; தனியார் ரிசார்ட் உரிமையாளர், சாலையில் நடந்து சென்ற போது யானை தாக்கி உயிரிழந்தார்.
முதுமலை மசினகுடி ஆச்சக்கரை பகுதியை சேர்ந்தவர் மேத்தா,71. தனியார் ரிசார்ட் உரிமையாளரான இவர், நேற்று முன்தினம் மாலை, 5:15 மணிக்கு ஆச்சக்கரை பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, எதிரே வந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.
அருகே உள்ளவர்கள் யானையை விரட்டி அவரை மீட்டனர்.
யானை தாக்கியதில் காயமடைந்த அவருக்கு, மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, நள்ளிரவு கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை, மசினகுடி துணை இயக்குனர் வித்யதர், வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, வன ஊழியர்கள் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.