/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்
பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்
பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்
பி.ஏ.பி., பாசன விரிவாக்கம் எப்போது வரும்? மேற்கு பகுதி விவசாயிகள் ஏக்கம்
பாசன வசதி இல்லாத கிராமங்கள்
சுல்தான்பேட்டை வட்டாரத்தில், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல், இடையர் பாளையம், சின்னக்குயிலி, போகம்பட்டி, பொன்னாக்காணி, பாப்பம்பட்டி, கள்ளப் பாளையம், இடையர் பாளையம் உள்ளிட்ட கிராமங்களும், பல்லடம் வட்டாரத்தில் கரடிவாவி, அனுப்பட்டி, புளியம்பட்டி, கேத்தனூர், பருவாய், கோடங்கி பாளையம் பணிக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களும் பி.ஏ.பி., பாசன வசதி இல்லாத கிராமங்களாகும். பி.ஏ.பி., பாசன திட்டம் துவங்கிய காலத்தில் இப்பகுதிகள் சேர்க்கப்படாமல் விடப்பட்டதால், இதுவரை பாசன வசதி இல்லாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது.
பொய்த்து போன பருவமழை
கடந்தாண்டு சுல்தான்பேட்டை வட்டார பகுதிகளில் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால், தென்னை விவசாயிகளும், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்தனர். இம்முறையும் பருவ மழை கைகொடுக்காவிட்டால், விவசாயத்தை கைவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்ட விரிவாக்கம்
மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படாமல் உள்ளது. பி.ஏ.பி., பாசன திட்டம் இப்பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.