/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்
28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்
28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்
28,000 சிறு தேயிலை விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த... மானியம் என்னாச்சு? இதுவரை வராததால் எதிர்பாா்த்த உறுப்பினர்கள் ஏமாற்றம்

பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்
மாவட்டத்தில் கடந்த, 24 ஆண்டுக்கு மேலாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு, 30 ரூபாய் வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
முதல்வர் அறிவித்த ரூ. 8.50 கோடி
இந்நிலையில், கடந்த பிப்., மாதம் பொள்ளாச்சியில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 2 ரூபாய் மானியம் வழங்கப்படும்,' என, அறிவித்தார்.
இதுவரை உறுப்பினருக்கு வரவில்லை
சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமன் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில், நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 2 ரூபாய் மானியம் அறிவித்த கையோடு மேடையில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து, அதற்கான காசோலையும் வழங்கினார். ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை.