Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வேலை வாய்ப்பற்றோருக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்றோருக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜன 21, 2024 10:45 PM


Google News
ஊட்டி:நீலகிரியில், வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கை; மாதம் ஒன்றுக்கு, 10 வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய்; தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய்; பிளஸ்---2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய்; பட்டதாரிகளுக்கு 600 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு, 600 ரூபாய்; மேல் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய் பட்டதாரிகளுக்கு, ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், வரும் மார்ச், 31ம் தேதியுடன் முடிவடையும் காலண்டிற்கு தகுதி உடைய வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பத்தை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

உதவி பெற தகுதிகள்:


10ம் வகுப்பு தேர்ச்சி, பெறாதவர்கள், (முறையாக பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தோல்வி அடைந்திருக்க வேண்டும்) அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 2024, மார்ச், 31அன்று 45 வயதும், இதர பிரிவினருக்கு , 40 வயது கடந்திருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதுடன், விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரடியாக படித்துக் கொண்டிருக்க கூடாது. முற்றிலும் வேலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

பள்ளி கல்வி முழுமையாக தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை உட்பட, அரசு துறைகளில் உதவி தொகை பெறும் பயனாளியாக இருக்கக் கூடாது.

முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்கு புத்தகம், ஆதார், ரேஷன் கார்டு மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன், ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள், ஜன., மாதத்திற்குள் சுய உறுதி ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us