/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம் தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்
தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்
தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்
தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்

பெற்றோர் கவனமாக@ இருக்க வேண்டும்
தேவாலா பகுதி, முனைவர் சமுத்திரபாண்டியன்,''தற்போதைய காலகட்டத்தில் வாகனங்கள் வைத்திருப்பது அவசிய தேவையாக மாறி உள்ளது. ஆனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதுடன், மூன்று அல்லது நான்கு பேர் ஒரே பைக் மற்றும் ஸ்கூட்டியில் பயணிப்பதால் விபத்து அதிகரித்து வருகிறது. ''படிக்கும் வயதில் பள்ளி மற்றும் கல்லுாரி செல்ல அரசு மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், அதில் பயணிக்க பெற்றோர் தங்கள் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லாவிடில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சி மொத்தமாக மறைந்துவிடும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்,'' என்றார்.
பெற்றோர் செயலால் பெரும் ஆபத்து
குன்னுார் சமூக ஆர்வலர் ஆல்தொரை கூறுகையில்,''இளம் தலைமுறையினருக்கு அதிக விலை கொடுத்து இரு சக்கர வாகனங்களை பெற்றோர் வாங்கி கொடுப்பதை பெருமையாக நினைக்கின்றனர். இதனை வைத்து அதிவேகத்தில் ஓட்டுவதும், ஹெல்மெட் இல்லாமல் செல்வதும் பாதகமாக முடிகிறது. விபத்து ஏற்பட்ட பிறகு வருத்தப்படுகின்றனர். தற்போது கிராம பகுதிகளிலும் இந்த நிலை ஏற்படுகிறது. போலீசார் சில குறிப்பிட்ட பாயிண்ட்களில் மட்டுமே நின்று அபராதம் விதிக்கின்றனர். இதனை அறிந்து வேறு வழியில் செல்பவர்கள் தப்பித்து கொள்கின்றனர்,'' என்றார்.
உயிர் முக்கியம் என்பதை உணர வேண்டும்
பந்தலுார் முன்னாள் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம், ''மனித உயிர் விலைமதிப்பு இல்லாதது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், சாகசம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, தலைகவசம் அணியாமலும், மொபைல் போனில் பேசிய படியும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதும், அதிவேகத்தில் பயணிப்பதும் தொடர்கிறது. இதனால், தினசரி விபத்துக்களில் எதிர்கால தலைமுறைகளின் உயிரை இழந்து வருவது வேதனையளிப்பதாக உள்ளது. எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நமது உயிர் முக்கியம், நமது குடும்பம் முக்கியம் என்பதை உணர்ந்து பாதுகாப் பாகவும், மித வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும்,'' என்றார்.