/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்
ஏப்., 6ல் முதல்வரால் திறக்கப்படும் புதிய மருத்துவ கல்லுாரிக்கு தேவைகள் அதிகம்! அடிப்படை பணிகள் பூர்த்தியானால் சிகிச்சைகள் எளிதாகும்

பணியில் காலதாமதம்
ஊட்டியில் நிலவி வந்த காலநிலை மாற்றத்தால் புதிய மருத்துவமனைக்கான கட்டுமான பணி தாமதமானது. மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. தொடர்ந்து, துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக, கடந்த ஓராண்டாக கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்தது. தற்போது கட்டுமான பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம், 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் மருத்துவமனையில் வார்டு வாரியாக சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்தனர்.
அவசர தேவைகள் என்ன?
இந்நிலையில், புதிய மருத்துவ கல்லுாரில் அமைந்துள்ள இடம் ஊட்டியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் கால்ப்கிளப் பகுதியில் அமைந்துள்ளது. தொலை துாரத்திலிருந்து வரும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல போதிய டவுன் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு டீன், டாக்டர்கள், பேராசிரியர்கள். உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் என குறைந்தது, 415 பேர் பணியில் இருக்க வேண்டும். தற்போது, 269 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பிற பணிகளுக்கு உடனடியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும்; மருத்துவமனை, ஊழியர்கள் குடியிருப்பு, மருத்துவ கல்லுாரி என, நாள்தோறும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டது.