Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/காட்டு யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை

காட்டு யானை உயிரிழப்பு : வனத்துறையினர் விசாரணை

ADDED : ஜன 04, 2024 10:58 PM


Google News
கூடலுார்:முதுமலை, மசினகுடி சீகூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வனப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன், வானவர் மசினன் அதன் உடலை நேற்று ஆய்வு செய்தனர். அதன் உடலை வனத்துறையினர் முன்னிலையில் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு, 40, வயது இருக்கும். பிரேத பரிசோதனைக்கு பின், பரிசோதனைக்காக அதன் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன், முடிவு கிடைத்த பின் இறந்ததற்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us