/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தரமற்ற பொங்கல் கரும்பு: நீலகிரி கலெக்டர் கடுப்புதரமற்ற பொங்கல் கரும்பு: நீலகிரி கலெக்டர் கடுப்பு
தரமற்ற பொங்கல் கரும்பு: நீலகிரி கலெக்டர் கடுப்பு
தரமற்ற பொங்கல் கரும்பு: நீலகிரி கலெக்டர் கடுப்பு
தரமற்ற பொங்கல் கரும்பு: நீலகிரி கலெக்டர் கடுப்பு
ADDED : ஜன 07, 2024 02:10 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கூட்டுறவு துறை வாயிலாக பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி கலெக்டர் அருணா, பொங்கல் தொகுப்பு பொருட்களை, ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் நேற்று காலை ஆய்வு செய்த போது, கொள்முதல் செய்யப்பட்ட பல கரும்பு கட்டுகள் தரமில்லாமல் இருந்தது தெரிய வந்தது.
அதிருப்தியடைந்த கலெக்டர், 'இங்கு தரமில்லாமல் உள்ள கரும்புகளை உடனடியாக மாற்றிய பின் மக்களுக்கு வழங்க வேண்டும்' என, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதனிடம் அறிவுறுத்தினார்.