/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜைகோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை
கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை
கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை
கோவில்களில் ஸ்ரீராம பஜனையுடன் சிறப்பு பூஜை

அயோத்தி நிகழ்ச்சி நேரலை
பந்தலுார் அருகே எருமாடு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கமிட்டி தலைவர் சதானந்தன் தலைமை வகித்தார்.
ஜெய் ஸ்ரீராம் கோஷம்
கோத்தகிரி, திம்பட்டி கிராமத்தில் உள்ள ராம கிருஷ்ணர் கோவிலில், அயோத்தியில் நடந்த ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை ஒட்டி, ஐயனுக்கு அதிகாலை முதல், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பா.ஜ., சிறப்பு வழிபாடு
குந்தா ஒன்றிய பா.ஜ., வினர் எடக்காடு, முக்கிமலை, முள்ளிமலை, மஞ்சூர் நகர், தூனேரி, மட்டக் கண்டி உட்பட பல்வேறு கிராமங்களில் கிராம மக்களுடன் இணைந்து கிராமகோவில்களில் சிறப்பு பஜனை பாடல்களுடன் ஸ்ரீ ராமர் பாராயணம் மற்றும், 108 முறை ஸ்ரீராம் ஜெய்ராம் உச்சரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அட்சதையிட்டு பக்தர்கள் பிரார்த்தனை
ஊட்டி எச்.பி.எப்., பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, பஜனை நிகழ்ச்சி நடந்தது. 12:25 மணியளவில் அட்சதை பிரசாதத்தை பொதுமக்கள் அனைவரும் பகவான் ஸ்ரீராமர் புகைப்படத்திற்கு இட்டு, பிரார்த்தனை செய்து, ஸ்ரீராமரின் அருளை பெற்றனர்.


