/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சோலார் மின் திட்டம்! மழைகால பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கைநீலகிரியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சோலார் மின் திட்டம்! மழைகால பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை
நீலகிரியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சோலார் மின் திட்டம்! மழைகால பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை
நீலகிரியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சோலார் மின் திட்டம்! மழைகால பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை
நீலகிரியில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சோலார் மின் திட்டம்! மழைகால பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை

மின்சார பயன்பாடு அதிகம்
இங்குள்ள பெரும்பாலான தோட்டங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய பணிகள் நடக்கிறது. குறிப்பாக, மலை காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. கனமழையின் போது மரங்கள் விழும் போது, மின் கம்பம் சாய்ந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுவதால், விவசாய பணிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்க, மாநில அரசு சோலார் மின்திட்டத்தை, சிறு விவசாயிகள் மத்தியில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
சோலார் திட்ட பயன்கள்
பொதுவாக, சோலார் மின் திட்டத்தால், நீர் சூடாக்குதல், விவசாயம்,போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பல துறைகளில் பெரும் பயன் ஏற்படுகிறது. நீலகிரியில் சமீப காலமாக மின்வாரிய உதவியுடன், விவசாய பயன்பாடுக்கு பல இடங்களில் சோலார் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது.
சிறு விவசாயிகள் ஆர்வம்
மின்பகிர்மான வட்டமேற்பார்வை பொறியாளர் சேகர் கூறுகையில், ''சூரிய மின் ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற முடியும். இந்த திட்ட செயல்பாடுகளால் சுற்றுசூழல் மாசு குறைகிறது.