Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி மரணம்

ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி மரணம்

ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி மரணம்

ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி மரணம்

ADDED : ஜூன் 24, 2025 09:39 PM


Google News
Latest Tamil News
பந்தலூர்:நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு, மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர் பன்னீர்செல்வம். இவரின் தாயார் அழகம்மா. 108 வயதான இவர் கடந்த தேர்தல் வரை வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியவர்.

தனது பணிகளை இவர் சொந்தமாகவே செய்து வந்ததுடன், யாருடைய துணையும் இன்றி நடந்து செல்வது மற்றும் 108 வயது மூதாட்டி என்று யாராலும் கூற முடியாத அளவிற்கு இருந்தவர். கடந்த ஐந்து நாட்களாக உடல் நலக்குறைவால் படுக்கையில் இருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.

ஐந்து தலைமுறைகளை பார்த்த மூதாட்டி அழகம்மா உடலுக்கு உறவினர்கள், பேரன்கள் மற்றும் கொள்ளு பேர குழந்தைகள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் தங்கள் கிராமத்தில் வயது முதிர்ந்த மூதாட்டி தங்களை விட்டு பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us