/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்

விழுந்த 140 மரங்கள்
மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்த நாளிலிருந்து, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார், பகுதிகளில், 140 பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு மக்கள் இரவில் மிகவும் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது மரங்கள் அறுத்து அகற்றினர்.
முறையாக ஆய்வு இல்லை
பல இடங்களில், 'குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலை ஓரங்கள்,' என, பல பகுதிகளில் பழமையான கற்பூர மரங்கள் வானுயர அளவுக்கு அபாயகரமான நிலையில் உள்ளன. இத்தகைய மரங்களை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கமிட்டிக்கு மனுக்கள் அளிக்கப்படுகிறது. அந்த கமிட்டி அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் துறையினரை ஒருங்கிணைத்து ஆய்வு மேற்கொண்டு மரத்தை அகற்ற வேண்டும். ஆனால், பல இடங்களில் சரிவர ஆய்வு மேற்கொள்ளாததால் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக அனுமதி அளித்தால், வரும் நாட்களில் தீவிரமடையும் மழையின் போது பாதிப்புகள் குறையும்.