/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேவர் சோலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் தேவர் சோலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்
தேவர் சோலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்
தேவர் சோலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்
தேவர் சோலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்
ADDED : செப் 21, 2025 10:41 PM
கூடலுார்; கூடலுார் தேவர்சோலை அருகே, காட்டு யானை தக்கி பழங்குடி இளைஞர் காயமடைந்தார்.
கூடலுார் தேவர்சோலை அருகே உள்ள, கடசனகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன், 34. இவர் இரவில் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது வீட்டின் அருகில் இருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இவரின் சப்தம் கேட்டு அருகே, உள்ளவர்கள் யானை விரட்டி அவரை மீட்டனர்.
காயமடைந்த அவரை, வனத்துறையினர் மீட்டு, சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.