/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா? பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?
பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?
பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?
பில்லுார் அணையில் துார் வாருவது சவாலா? சாத்தியமா?

முயற்சி தோல்வி
நீலகிரி மாவட்டத்தில் ஒரு பகுதியும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, மன்னார்காடு தாலுகா ஆகிய பகுதிகளில், 460 சதுர மைல் பரப்பளவு, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாகும். இந்த அணை கட்டி, 58 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் அணையை துார் வாருவதற்கு 1991ம் ஆண்டு முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
டிரெஜ்ஜர் இயந்திரம்
பில்லுார் அணையில் தண்ணீர் வற்றிய பிறகு துார் வாரலாம் என்றால் ஒரு ஆண்டில் பெரும்பாலான நாட்களில் பில்லுார் அணையில் நீர் நிரம்பி இருக்கும். இதனால் தண்ணீர் வற்றிய பின்னர் துார் வாரலாம் என்ற முடிவு கைவிடப்பட்டது. அடுத்த கட்டமாக அணையில் தண்ணீர் இருக்கும்போதே துார் வாரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அணையை பராமரித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்தது. இதற்காக ஆறு மற்றும் கடல் முகத்துவாரங்களில் துார் வாரும் டிரெஜ்ஜர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த இயந்திரம் துார்வாரி எடுக்கும் மண்ணை குழாய் வாயிலாக கொண்டு வந்து கரையில் கொட்டப்படும். ஆனால் கடல் மட்டத்திலிருந்து 1387 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் துார் வாரப்படும் வண்டல் மண்ணை தரைப்பகுதிக்கு கொண்டு வருவது சவாலான விஷயமாகும்.
ஜியோ டியூப்
உலக வங்கி நிதி உதவியுடன் பில்லுார் அணையில் எவ்வளவு வண்டல் மண் இருக்கிறது என்று பாத் மெட்ரீக் மற்றும் டோபோ கிராபிக்கல் சர்வே என்ற அளவீட்டு ஆய்வு மற்றும் நிலவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் இணைந்து இந்த திட்டத்தில் பங்கு கொண்டுள்ளன. பில்லுார் அணையில் துார் வாருவது என்பது ஆறும், கடலும் சேரும் இடமான முகத்துவாரங்களை ஆழப்படுத்துவதற்காக டிரெஜ்ஜர் என்று சொல்லப்படும் இயந்திரம் வாயிலாக துார் வாரப்படும். இந்த முறையில் துார் வாரி எடுக்கப்படும் மண் கரையில் கொண்டு வந்து குழாய் வாயிலாக கொட்டப்படும்.
52 லட்சம் முறை
பில்லுார் அணையில் 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லாரியில் அதிகபட்சம் 5 கனமீட்டர் மண் தான் எடுத்து வர முடியும். அதன்படி பார்த்தால் பில்லுார் அணையில் உள்ள 2 கோடியே 60 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை தரைப்பகுதிக்கு எடுத்து வர 52 லட்சம் லாரிகள் வேண்டும். அதாவது 52 லட்சம் முறை லாரிகள் பில்லுார் அணைக்கு வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக மேலும், கீழும் சென்று எடுத்து வரவேண்டும், இத்தனை முறை வனப்பகுதிக்குள் லாரிகள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்காது. அப்படியே அனுமதி அளித்தாலும் லாரிகள் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் வன விலங்குகளுக்கு மட்டும் அல்லாமல் பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதன்முறை
எனவே இந்த மெகா திட்டத்தின் முதல் கட்டமாக 25 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண்ணை மட்டும் ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டிரெஜ்ஜர் இயந்திரத்தின் வாயிலாக அணையின் அடிப்பகுதியில் ஆழப்படுத்தி வண்டல் மண் எடுக்கப்படும். ஆனால் அந்த மண்ணை அணையிலிருந்து கீழே கொண்டு வராமல் ஜியோ டியுப் என்ற மெகா சைஸ் டியுப்களில் நிரப்பப்படும். இத்தகைய ஜியோ டியுப் தொழில்நுட்பம் தண்ணீரில் இருந்து மண்ணை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கடலில் பாலம் கட்டும் போது இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அணையில் துார் வாருவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கரை பலப்படுத்தப்படும்
பின்னர் அவற்றிலிருந்து தண்ணீர் மட்டும் பிரிக்கப்பட்டு அணையிலேயே மீண்டும் தண்ணீர் விடப்படும். ஆனால் மண் மட்டும் பில்லுார் அணையின் கரையோரங்களில் வைக்கப்பட்டுள்ள ஜியோ டியுப்களில் சேகரிக்கப்படும். அந்த மண் அங்கேயே வைக்கப்பட்டு அணையில் கரை பலப்படுத்தப்படும். அவற்றில் புல் மற்றும் செடிகள், மரங்கள் வளர்ந்து அதுவே அணையில் கரையை பலப்படுத்தும் பாதுகாப்பு அரணாக நாளடைவில் மாறி விடும். மேலும் அந்த மண் மீண்டும் தண்ணீரில் கரைந்து அணைக்குள் செல்லாதவாறு பாதுகாப்பாக ஜியோ டியுப்பில் வைக்கப்படும்.