/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தடுப்பணையில் குப்பை குவியல் பதறுது நெஞ்சம்:நிலத்தடி நீருக்கு ஆபத்து...தடுப்பணையில் குப்பை குவியல் பதறுது நெஞ்சம்:நிலத்தடி நீருக்கு ஆபத்து...
தடுப்பணையில் குப்பை குவியல் பதறுது நெஞ்சம்:நிலத்தடி நீருக்கு ஆபத்து...
தடுப்பணையில் குப்பை குவியல் பதறுது நெஞ்சம்:நிலத்தடி நீருக்கு ஆபத்து...
தடுப்பணையில் குப்பை குவியல் பதறுது நெஞ்சம்:நிலத்தடி நீருக்கு ஆபத்து...

100 ஏக்கர் பரப்பளவு
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால், கணுவாய் மேல், கீழ் தடுப்பணைகள் நிறைந்து, வெள்ளம் வழிந்து ஓடியது. தற்போது, தடுப்பணைகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன. இப்பகுதியில் தற்போது, குறிப்பாக, கணுவாய் கீழ் தடுப்பணை பகுதியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கொட்டுவது மீண்டும் தொடங்கியுள்ளது.
மீண்டும் துவக்கம்
தூய்மையான நிலையில் இருந்த கணுவாய் கீழ் தடுப்பணையில் மீண்டும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது துவங்கி உள்ளது. இங்கு தேங்கும் மழை நீரால் பன்னிமடை, சோமையம்பாளையம், கோவை மாநகராட்சியின் துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதிகள், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகும். இதனால் திறந்த வெளி கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர் பெருகி, விவசாயம் செழிக்கும். தற்போது கணுவாய் கீழ் தடுப்பணையில் குப்பைகளை கொட்டுவது மீண்டும் அதிகரித்து உள்ளதால், நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை போர்க்கால அடிப்படையில் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்' என்றனர்.


