Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கொட்டும் மழையிலும் பழனிக்கு பாதயாத்திரை; மலை மாவட்ட பக்தர்கள் பக்தி பரவசம்

கொட்டும் மழையிலும் பழனிக்கு பாதயாத்திரை; மலை மாவட்ட பக்தர்கள் பக்தி பரவசம்

கொட்டும் மழையிலும் பழனிக்கு பாதயாத்திரை; மலை மாவட்ட பக்தர்கள் பக்தி பரவசம்

கொட்டும் மழையிலும் பழனிக்கு பாதயாத்திரை; மலை மாவட்ட பக்தர்கள் பக்தி பரவசம்

ADDED : ஜன 09, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
குன்னுார்;தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள், கொட்டும் மழையிலும் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடக்கும் தைப்பூச திருவிழாவில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த ஆண்டு திருவிழா வரும், 19ம் தேதி துவங்குகிறது. 25ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. 28ம் தேதி நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் சிறுவர்கள் முதல் இளைஞர் பெரியவர்கள் வரை விரதம் மேற்கொண்டு பாதயாத்திரை செல்கின்றனர்.

தற்போது, குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையிலும் முருக பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் பாதயாத்திரை செல்கின்றனர். 200 கி.மீ., துாரம் முருக பக்தர்கள் பக்தியுடன் பாதயாத்திரை செல்வது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us