/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு பைபாஸ் சாலை தான் தீர்வு; ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்புமேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு பைபாஸ் சாலை தான் தீர்வு; ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பு
மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு பைபாஸ் சாலை தான் தீர்வு; ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பு
மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு பைபாஸ் சாலை தான் தீர்வு; ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பு
மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு பைபாஸ் சாலை தான் தீர்வு; ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பு

தினம் தினம் நெரிசல்
இதனால், ஊட்டியின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் மேட்டுப்பாளையத்தில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொங்கல் விடுமுறைக்காக நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு வந்துள்ளன. காலை, 7:00 மணி முதல் சாரை சாரையாக கார்கள், டெம்போ, சுற்றுலா பஸ்கள் என ஏராளமான வாகனங்கள், மதியம், 12:00 மணி வரை ஊட்டிக்கு சென்றன. ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கார்கள் வந்ததால், மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் காத்திருந்து, மெதுவாக ஊர்ந்து சென்றன.
ஆக்கிரமிப்புகள்
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நகரில், 50 ஆண்டுகளுக்கு முன், சாலைகள் மிகவும் அகலமாக இருந்துள்ளன. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியதால் சாலையின் அகலம் குறுகியது. இதனால் தற்போதுள்ள சாலையில், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.


