Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஜமாபந்தியில் பெறப்பட்ட 2,763 மனுக்கள்; நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

ஜமாபந்தியில் பெறப்பட்ட 2,763 மனுக்கள்; நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

ஜமாபந்தியில் பெறப்பட்ட 2,763 மனுக்கள்; நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

ஜமாபந்தியில் பெறப்பட்ட 2,763 மனுக்கள்; நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

ADDED : ஜூன் 13, 2025 09:24 PM


Google News
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடந்த ஜமாபந்தியில், 2,763 மனுக்கள் பெறப்பட்டன.

குன்னுார் தாசில்தார் அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 3 நாட்கள் நடந்தன. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில், ''மாவட்டத்தில், 3 நாட்கள் நடந்த ஜமாபந்தியில், குன்னுாரில், 624; ஊட்டியில், 870; கோத்தகிரியில், 424 ; கூடலுாரில், 483; குந்தாவில், 152; பந்தலுாரில், 216, என, மொத்தம் 2,769 மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

குன்னுாரில், '5 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள், 2 பயனாளிகளுக்கு சாதி சான்று, ஒரு பெண் குழந்தை சான்று, ஒரு பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணை, 2 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண தொகை தலா 16 ஆயிரம்,' என, 11 பயனாளிகளுக்கு 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்திரா நகர் மக்களிடம் பெறப்பட்ட மனு மீது உடனடி நடவடிக்கையாக கால்வாயை துார்வாரி, அப்பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், நகராட்சி பொது நிதியிலிருந்து சிறிய பணிகள் மேற்கொள்ளவும் கமிஷனருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி, குன்னூர் தாசில்தார் ஜவஹர் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us