Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மைதானமாக காட்சியளிக்கும் நீர்பிடிப்பு பகுதிகள்; மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மின் வாரியம்

மைதானமாக காட்சியளிக்கும் நீர்பிடிப்பு பகுதிகள்; மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மின் வாரியம்

மைதானமாக காட்சியளிக்கும் நீர்பிடிப்பு பகுதிகள்; மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மின் வாரியம்

மைதானமாக காட்சியளிக்கும் நீர்பிடிப்பு பகுதிகள்; மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மின் வாரியம்

UPDATED : ஜூன் 16, 2024 03:27 AMADDED : ஜூன் 15, 2024 11:52 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஊட்டி:நீலகிரியில் அணைகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் மழையின்றி வறண்டு வருவதால் மழையை எதிர்பார்த்து மின்வாரியம் காத்திருக்கிறது.

நீலகிரியில், முக்குருத்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார் ஆகிய, 13 அணைகள் உள்ளன. அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்தாண்டில் கோடை மழை தாமதமாக, 25 செ.மீ., பெய்தது. தென் மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது.

மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் மழையின்றி வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன.

பிற அணைகளிலும் தண்ணீர் அளவு சரிந்துள்ளது. அணைகளில் தண்ணீர் இல்லாததால் காட்டுக்குப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், முக்குருத்தி உள்ளிட்ட மின்நிலையங்களில் மின்உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்படுகிறது.

மின்நிலையங்கள் வாயிலாக, தினசரி, 200 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தி குறைந்ததால் ஈரோடு, மதுரை மற்றும் சென்னைக்கு போதிய அளவில் மின்சாரம் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பெரும்பாலான அணைகளில் தண்ணீர் அளவு சரிந்துள்ளது. கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் சராசரி மழை அளவை எட்டினால் தான் இங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டும். மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us