ADDED : ஜூலை 21, 2024 01:08 AM

செய்முறை:
முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, ஒருடீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, நான்கு விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் புளியை கால் கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். பின் அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள் துாள் சேர்த்து, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி சேர்த்து, மாங்காய் துண்டுகளையும் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி, மூன்று நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதனை சாம்பாரில் ஊற்றி, கொத்தமல்லியைத் துாவினால், மாங்காய் சாம்பார் ரெடி.