/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கண்ணாடி மாளிகையை அலங்கரித்த பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள் கண்ணாடி மாளிகையை அலங்கரித்த பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்
கண்ணாடி மாளிகையை அலங்கரித்த பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்
கண்ணாடி மாளிகையை அலங்கரித்த பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்
கண்ணாடி மாளிகையை அலங்கரித்த பூந்தொட்டியில் லில்லியம் மலர்கள்
ADDED : ஜூன் 07, 2024 12:16 AM

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையில் லில்லியம் செடிகள், மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில் நுாற்றுக்கணக்கான மலர் நாற்றுக்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 5,000 தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக லில்லியம் மலர் செடிகள் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்டது. தற்போது பூத்து குலுங்கிய இந்த மலர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.