Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனபத்ரகாளியம்மன் கோவிலில் 30ல் குண்டம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் 30ல் குண்டம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் 30ல் குண்டம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் 30ல் குண்டம்

ADDED : ஜூலை 19, 2024 11:41 PM


Google News
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் விழா, வருகிற, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்க உள்ளது.

26ம் தேதி லட்சார்ச்சனையும், 27ல் கிராம சாந்தியும், 28ல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது. அன்று இரவு சிம்ம வாகனத்தில், அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 29ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் திருவிழாவும் நடைபெற உள்ளது.

31ம் தேதி காலையில் மாவிளக்கும், மாலையில் பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், ஆகஸ்ட் 1ம் தேதி இரவு பரிவேட்டையும் வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us