ADDED : ஜூலை 03, 2024 02:17 AM
குன்னுார்;குன்னுார் தேயிலை ஏல மையம் மற்றும் 'இன்கோ' சர்வ் மையத்தில் வாரந்தோறும் ஏலம் விடப்படுகிறது. தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், ஜூன் மாத ஏலத்தின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கான விலை, குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம் சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
'ஜூன் மாதத்திற்கான பசுந்தேயிலை, கிலோ, 18.00 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,' என, தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் அறிவித்துள்ளார்.
கடந்த நவ., 15.40, ரூபாய் இருந்த நிலையில், தற்போது பசுந்தேயிலை கிலோவுக்கு, 18 ரூபாயாக உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.