/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர் யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர்
யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர்
யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர்
யானை கண்காணிப்பு பணியில் வன குழுவினர்
ADDED : ஜூலை 05, 2024 01:48 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே, நெலாகோட்டை பகுதி, வயநாடு செல்லும் சாலை, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் காலை, 9:00 மணிக்கு சாலையில் வந்த காரை யானை தாக்கி சேதப்படுத்தியது. 'வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, 24 மணி நேரமும் அதிவிரைவு மீட்பு குழுவினர் மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, 6:00 மணி முதல் 10:00 மணி வரை, வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்புடன் வந்து செல்ல ஏதுவாக, பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதுடன், மாலை, 4:00- மணிக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.