Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

ADDED : ஜூன் 16, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
கூடலூர்:-கூடலூர், புளியம்பாறை அருகே, தனியார் பாக்கு தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, புளியம்வயல் பகுதியில் தனியார் பாக்கு தோட்டம் உள்ளது. நேற்று, காலை அவ்வழியாக சென்ற பொது மக்கள் சிறுத்தை இறந்து கிடந்ததை பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர்கள் வீரமணி, குமரன், வன ஊழியர்கள் அதன் உடலை ஆய்வு செய்தனர். சிறுத்தை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். சிறுத்தை உடலை, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் சிறுத்தைக்கு 8 வயது இருக்கலாம். சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின், இறந்ததற்கான காரணம் தெரியவரும்.' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us