Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 9,102 மாணவர்கள் பயன்

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 9,102 மாணவர்கள் பயன்

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 9,102 மாணவர்கள் பயன்

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் மாவட்டத்தில் 9,102 மாணவர்கள் பயன்

ADDED : ஜூன் 24, 2024 12:18 AM


Google News
ஊட்டி:நீலகிரியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில், இதுவரை, 226 பள்ளிகளில், 9,102 மாணவர்கள் பயனுடைந்துள்ளனர்.

ஊட்டியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை, அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளில் விரிவு படுத்துவது குறித்து, அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் பேசியதாவது:

நீலகிரியில் காலை உணவு வழங்கும் திட்டம், முதல் கட்டமாக கூடலுாரில், 2022, செப்., 15ல், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும், 63 அரசு தொடக்கப் பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. 2,749 மாணவர்கள் பயனடைந்தனர்.

இரண்டாவது கட்டமாக, கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள, 203 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 6,353 மாணவர்கள் துவக்கப்பட்டது. இதுவரை, 266 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மொத்தம், 9,102 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டம், விரைவில் அரசு உதவி பெறும், 26 துவக்கப் பள்ளிகளில், 425 மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம், குழந்தைகளின் ஆரோக்கியம் முன்னேறியுள்ளது. அத்துடன், பாடத்தில் கவனம் செலுத்தி, மாணவர்களின் பள்ளி வருகை அதிகரித்துள்ளது என, பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு, கலெக்டர் பேசினார். அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us