ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
மோகனூர்: மோகனூர் அருகே, லத்துவாடி அருந்ததியர் தெருவை சேர்ந்-தவர் ராமச்சந்திரன், 50.
இவர் அரசு போக்குவரத்து கழக பணிம-னையில், டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோகிலா, 45, மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்-ளியில் ஆசிரியராக உள்ளார்.லத்துவாடியில் உள்ள பழைய வீட்டின் அருகில், புதிதாக வீடு கட்டி வருகின்றனர். பழைய வீட்டில் இருந்த தாய், தந்தை கடந்த, 7ம் தேதி வெளியில் சென்ற நிலையில் இவரது வீட்டிலி-ருந்த, ஒரு செயின் உள்பட, 46 கிராம் எடையுள்ள நகை திருட்டு போனது. இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகார்படி, மோகனுார் எஸ்.ஐ.,நந்தகுமார் விசாரித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் அருகே உள்ள அலங்காநத்தம், பாலப்-பட்டியை சேர்ந்த சரத்குமார், 31, என்பவர் கான்கிரீட் ட்ரில்லிங் வேலை செய்துவந்தது தெரிந்தது. அவரது நடவடிக்கையில் சந்தே-கமடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நகை திருடி-யதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து நகைகளை பறி-முதல் செய்த போலீசார், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம், 2ல் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.