ADDED : மே 22, 2025 01:44 AM
ப.வேலுார், வேலகவுண்டம்பட்டி அருகே, சித்தமூப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து, 45; இவர், வையப்பமலையில் டைலர் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, சொந்த வேலையாக திருச்செங்கோடு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல தன் இருசக்கர வாகனத்தில், வேலகவுண்டம்பட்டியில் இருந்து வையப்பமலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தொண்டிப்பட்டி புதுார், காந்தி சிலை அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பச்சமுத்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பச்சமுத்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.