/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
ADDED : மே 29, 2025 01:36 AM
குமாரபாளையம்,குமாரபாளையம், எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 29; லேத் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, சேலம்-கோவை புறவழிச்சாலை, ஜே.கே.கே., முனிராஜா கல்லுாரி அருகே சாலையை நடந்தபடி கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த டூவீலர், அவர் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். கோபாலகிருஷ்ணனை, ஈரோடு தனியார் மருத்துவமனையிலும்; விபத்துக்கு காரணமான, கோவை தனியார் கல்லுாரி மாணவர் நவீன், 22, கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். குமாரபாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.