Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஒரு சவரனுக்காக மூதாட்டி கொலை; இருவர் சிக்கினர்

ஒரு சவரனுக்காக மூதாட்டி கொலை; இருவர் சிக்கினர்

ஒரு சவரனுக்காக மூதாட்டி கொலை; இருவர் சிக்கினர்

ஒரு சவரனுக்காக மூதாட்டி கொலை; இருவர் சிக்கினர்

ADDED : மார் 17, 2025 02:03 AM


Google News
பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி, 90; கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான கோகுல்ராஜ், 19, தாமோதரன், 31, 1 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி சரஸ்வதி வீட்டருகே காலியிடத்தில் கோகுல்ராஜ் மது குடித்த போது, மூதாட்டியின் தோடை பறிக்க வீட்டிற்குள் சென்று, அவரை கீழே தள்ளி, கையால் முகத்தை பொத்தி, மூச்சுத்திணற வைத்து கொலை செய்தது தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us