ADDED : செப் 03, 2025 02:18 AM
ராசிபுரம், : ஆர்.சி.எம்.எஸ்.,ல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட், நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன், அறுவடை செய்து, வேகவைத்து, காய வைத்து ஜலித்து எடுத்து வருவர்.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வர, விவசாயிகளால் தயார் செய்ய முடியவில்லை. வேகவைத்து, காயவைக்க வேண்டும். அதன்பிறகு மஞ்சளை சலித்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். இப்பணிகள் பாதிக்கப்பட்டதால், நேற்று ஆர்.சி.எம்.எஸ்.,க்கு குறைந்தளவே மஞ்சள் மூட்டைகள் வரத்தாகின. இதனால, நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.