Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்

ADDED : ஜூலை 11, 2024 12:41 AM


Google News
மல்லசமுத்திரம்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நாடு முழுதும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; சட்டப்படி அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாயத்து நிர்வா-கிகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியம், நாகர்பாளையம் பஞ்சாயத்தில், ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேல், ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us