Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இரு கரையை தொட்டபடி கரைபுரண்டு ஓடும் காவிரி

இரு கரையை தொட்டபடி கரைபுரண்டு ஓடும் காவிரி

இரு கரையை தொட்டபடி கரைபுரண்டு ஓடும் காவிரி

இரு கரையை தொட்டபடி கரைபுரண்டு ஓடும் காவிரி

ADDED : ஜூலை 31, 2024 07:15 AM


Google News
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இருகரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றோரத்தில் நாட்டாகவுண்டம்புதுார், சந்தைப்பேட்டை, பாவடித்தெரு, சத்யா நகர், ஜனதா நகர் உள்ளிட்ட ஆற்றோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில், வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆற்றுப்பகுதிக்கு மக்கள் செல்லும் வழித்தடத்தில், 'பேரிகாட்' வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பள்ளிப்பாளையம் பகுதி ஆற்றின் இரு கரையையும் தொட்டபடி, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us