ADDED : செப் 22, 2025 01:50 AM
நாமக்கல்:நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி, ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இங்கு சுவாமிகளுக்கு சாற்றப்படும் ஆடைகள், அவ்வப்போது ஏலம் விடப்படும்.
அதன்படி, நேற்று ஆஞ்சநேயர், நரசிம்மர், நாமகிரி தாயாருக்கு சாற்றப்பட்ட வேட்டி, சேலைகள் ஏலம் விடப்பட்டன. பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இறுதியில், 80,300 ரூபாய்க்கு ஏலம் போனது.