Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது; கார் பறிமுதல்

ADDED : ஜூலை 25, 2024 01:26 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுபாளையம் சுடு-காடு அருகே, நேற்று மதியம், 2:00 மணிக்கு, எஸ்.ஐ., ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடு-பட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 11 மூட்டைகளில், 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்-றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர், முத்துகாப்பட்டி, புதுத்தெ-ருவை சேர்ந்த கோவிந்தராஜ், 49, என்பது தெரியவந்தது.மேலும், பொது மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வ-தற்கும், வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்-பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. ரேஷன் அரிசியை கடத்திய கோவிந்தராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 550 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us