/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/துப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனைதுப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனை
துப்பாக்கி சுடும் போட்டி மாணவர் தேசிய சாதனை
மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பெரியகரசபாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம், இன்று நடக்கிறது. இன்று, நாளை மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது.காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் செந்தில் முத்து இலவசமாக பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாந்தா அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
பள்ளிப்பாளையத்தில் ஜோதிடர் திருவிழா
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் கல்வி மையம் சார்பில் ஆறுபடை ஜோதிட திருவிழா, பள்ளிப்பாளையம் அருகே, ஜீவா செட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று ஆராய்ச்சி அறிவகம் நிறுவனர் தலைவர் முகுந்தன் முரளி தலைமையில் துவக்கப்பட்டது.நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் இருந்து ஜோதிடர்கள், பஞ்சாங்கம் மற்றும் வாஸ்து, பரிகாரம் உள்ளிட்ட பல நிபுணர்கள் என, 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் பேசினர். இன்று, நாளை என, இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், தலைச்சிறந்த ஜோதிடர்கள் கலந்துகொண்டு, பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். மேலும், புதிய நுால்கள் வெளியிடப்படுகின்றன.
மரவள்ளி விலை சரிவு
ப.வேலுார்: தேவை குறைந்ததால், மரவள்ளிக்கிழங்கு விலை சரிந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.