Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வரி செலுத்தாத ஆம்னி வேன், பஸ், சரக்கு வாகனம் பறிமுதல்

வரி செலுத்தாத ஆம்னி வேன், பஸ், சரக்கு வாகனம் பறிமுதல்

வரி செலுத்தாத ஆம்னி வேன், பஸ், சரக்கு வாகனம் பறிமுதல்

வரி செலுத்தாத ஆம்னி வேன், பஸ், சரக்கு வாகனம் பறிமுதல்

ADDED : பிப் 25, 2024 03:27 AM


Google News
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வாகன சோதனை நடத்தப்பட்டு வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

குமாரபாளையம் - சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் வாகன சோதனை நடத்தினார். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்தது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் கூறியதாவது: 75 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அபராத தொகை ஒரு லட்சத்து, 5,000 ரூபாய், வரியாக, 43 ஆயிரத்து, 250 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. வரி செலுத்தாத ஒரு ஆம்னி வேன், ஒரு ஆம்னி பஸ், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குமாரபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பாரம் ஏற்றிய மூன்று வாகனங்கள் உள்ளடங்கும்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us