Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை 'டல்'

கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை 'டல்'

கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை 'டல்'

கேரளா வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் விற்பனை 'டல்'

ADDED : ஜூலை 31, 2024 07:15 AM


Google News
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே, புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது.

இந்த சந்தைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.மாடுகளை வாங்க கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவர். தற்போது, கேரளாவில் நல்ல மழை பெய்து வருவதால், அங்கிருந்து வரும் வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், விற்பனை மந்தமாகி, 1.50 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us